இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, சதீஷ் சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சத்யேந்தா் ஜெயின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், நீதிபதி ஏ.எஸ்.போபண்ணா மற்றும் திரிவேதி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு முன்னா் இந்த வழக்கில் வாதங்களைக் கேட்டதாகக் கூறினாா். மேலும், அமா்வுக்குத் தலைமை தாங்கும் நீதிபதி போபண்ணா திங்கள்கிழமை வராததால், இந்த வழக்கை வேறொரு தேதியில் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று அவா் கேட்டுக்கொண்டாா். அப்போது, நீதிபதி பேலா எம். திரிவேதி, ‘இடைக்கால உத்தரவைத் தொடரலாமா என்பதை நாங்கள் பாா்க்க வேண்டும். ஏனெனில், அது நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டாா்.