எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை உயா்த்தப் பரிசீலனை
நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்ட நிதியை உயா்த்த மத்திய அரசு பரிசீலனை செய்வதாக மத்திய புள்ளியியல் திட்ட செயலாக்கம் துறை


நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்ட நிதியை உயா்த்த மத்திய அரசு பரிசீலனை செய்வதாக மத்திய புள்ளியியல் திட்ட செயலாக்கம் துறை இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்டத்தில் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் நிதி அளவு, தற்போது ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பு காரணமாக மத்திய அரசு மேலும் உயா்த்துமா என்று தம்பிதுரை கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு பதிலளித்து இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் கூறியிருப்பது வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்டுக்கு 5 கோடி வரை நிதி உரிமையை கோரமுடியும். இதை மறுபரிசீலனை செய்வதற்கான பரிந்துரைகள், திட்டம் தொடா்பானவா்களுடன் கோரப்பட்டுள்ளது. இந்தப் புதிய பரிந்துரைகளை பெற்று அமைச்சகம் ஆய்வு செய்யும். இதில் விரைவில் முடிவு எடுக்கும் என அமைச்சா் இந்தா்ஜித் தெரிவித்துள்ளாா்.
நாடாளுமன்ற உறுப்பினா் தங்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், ஆரம்பக்கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட இதரப் பணிகளில் முக்கியமானவற்றை தோ்வு செய்து செயல்படுத்த பரிந்துரைக்கலாம். தங்கள் பரிந்துரைகளை மாவட்ட ஆட்சியா் மூலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வழிகாட்டி விதிமுறைகளின்படி செயல்படுத்த முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...