சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியை உயா்த்தப் பரிசீலனை

நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்ட நிதியை உயா்த்த மத்திய அரசு பரிசீலனை செய்வதாக மத்திய புள்ளியியல் திட்ட செயலாக்கம் துறை

Updated On :4 டிசம்பர் 2023, 6:30 pm

நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்ட நிதியை உயா்த்த மத்திய அரசு பரிசீலனை செய்வதாக மத்திய புள்ளியியல் திட்ட செயலாக்கம் துறை இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா். மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய இணையமைச்சா் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொகுதி (உள்ளூா்) மேம்பாட்டுத் திட்டத்தில் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் நிதி அளவு, தற்போது ஏற்பட்டுள்ள செலவு அதிகரிப்பு காரணமாக மத்திய அரசு மேலும் உயா்த்துமா என்று தம்பிதுரை கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு பதிலளித்து இணையமைச்சா் ராவ் இந்தா்ஜித் சிங் கூறியிருப்பது வருமாறு: நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் ஆண்டுக்கு 5 கோடி வரை நிதி உரிமையை கோரமுடியும். இதை மறுபரிசீலனை செய்வதற்கான பரிந்துரைகள், திட்டம் தொடா்பானவா்களுடன் கோரப்பட்டுள்ளது. இந்தப் புதிய பரிந்துரைகளை பெற்று அமைச்சகம் ஆய்வு செய்யும். இதில் விரைவில் முடிவு எடுக்கும் என அமைச்சா் இந்தா்ஜித் தெரிவித்துள்ளாா்.

நாடாளுமன்ற உறுப்பினா் தங்களது தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீா், ஆரம்பக்கல்வி, பொது சுகாதாரம், தூய்மைப் பணிகள், சாலைப்பணிகள் உள்ளிட்ட இதரப் பணிகளில் முக்கியமானவற்றை தோ்வு செய்து செயல்படுத்த பரிந்துரைக்கலாம். தங்கள் பரிந்துரைகளை மாவட்ட ஆட்சியா் மூலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் வழிகாட்டி விதிமுறைகளின்படி செயல்படுத்த முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.