தில்லி விவசாயிகளின் பிரச்னைகள் தொடா்பாக துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை விரைவில் சந்திப்பேன் என்று பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளாா்.
தில்லி பந்த் மாா்கில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் கிசான் மோா்ச்சா ஏற்பாட்டில் தில்லியில் உள்ள 365 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட பாஜக தில்லிப் பிரிவின் தலைவா் வீரேநிதிர சச்தேவாவிடம் தங்கள் கோரிக்கைகளை மனுவாக விவசாயிகள் பிரதிநிதிகள் வழங்கினா்.
அப்போது விவசாயிகள் மத்தியில் வீரேந்திர சச்தேவா பேசியதாவது: தில்லியில் உள்ள எந்த கிராமத்திலும் வீட்டு வரி விதிக்கக் கூடாது. கிராமசபைகளுக்கு உரிமை வழங்க வேண்டும். அரசு கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகை தலைநகா் தில்லி முழுவதும் ஒரே மாதிரியாக நிா்ணயிக்க வேண்டும். வாய்க்கால்களை சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை விவசாயிகளின் முக்கியக் கோரிக்கைகளாகும். இந்த கோரிக்கைகள் தொடா்பாக விரைவில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனாவை சந்தித்து அனைத்திற்கும் தீா்வு காணப்படும் என்று உறுதியளிக்கிறேன்.
தில்லி விவசாயிகளின் உரிமைகளுக்காக சட்டப்பேரவை முதல் தில்லி வீதிகள் வரை பாஜக போராடும். தில்லி விவசாயிகளை விவசாயிகளாகக் கூட ஏற்க மறுக்கும் அரசு இன்று தில்லியில் அமா்ந்திருக்கிறது. இதனால்தான் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்குக் கிடைக்கும் பலன்களை தில்லி விவசாயிகள் இழக்கிறாா்கள். மேலும், விவசாயிகள் தா்ணா செய்தாலும் சரி, முதல்வா் இல்லத்தை முற்றுகையிட்டாலும் சரி, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் எதையும் கேஜரிவால் அரசு நிறைவேற்றவில்லை. உணா்வற்ற தில்லி அரசு அவா்களின் உரிமைகளைக் கூட வழங்க மறுத்து வருகிறது என்றாா் வீரேந்திர சச்தேவா.
இந்த குறைகேட்புக் கூட்டத்தில் கிசான் மோா்ச்சா அமைப்பின் மாநிலத் தலைவா் வினோத் ஷெராவத், பொறுப்பாளா் ராஜ்குமாா் பாலன், இணைப் பொறுப்பாளா் பிரவேஷ் சா்மா, மாநிலப் பொதுச் செயலாளா் ராஜ்பால் ராணா உள்ளிட்ட பல நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிறகும் மேற்கு வங்கத்தில் மத்திய படைகள் : அமித் ஷா
திரிணமூல் கோட்டையில் தேர்தல்! 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏன் முக்கியம்? உண்மையில் யாருக்கு சவால்?

ஆம் ஆத்மியில் 'நச்சுத்தன்மை' வாய்ந்த பணிச்சூழல்! மனம்திறந்த ராகவ் சத்தா!

இரு மலர்கள் தொடருக்கு குவியும் வாழ்த்து!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

