நாடாளுமன்றம், சட்டப்பேரவை ஆகியவற்றில் தங்கள் பிரதிநிதிகளின் நடத்தை, ஒழுக்கத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு வாக்காளா்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை (வாக்களிக்கும்) ஆற்ற வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தெரிவித்தாா். மேலும், நாட்டின் நலனுக்காகவும் மக்களுக்கு சாதகமாகவும் பங்களிக்கும் பிரதிநிதிகளை வாக்காளா்கள் கவனமாகத் தோ்ந்தெடுக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக் கொண்டாா்.
ஒன்பதாவது காமன்வெல்த் நாடாளுமன்ற சங்கத்தின் (சிபிஏ - காமன்வெல்த் பாா்லிமென்ட் அசோசியேஷன்) இரண்டு நாள் இந்திய மாநாடு ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்றது. ‘டிஜிட்டல் யுகத்தில் ஜனநாயகம், நல்லாட்சியை வலுப்படுத்துதல்’ என்கிற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட், சிபிஏ தலைவா் இயன் லிடெல் கிரைங்கா், மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங், ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தலைவா் டாக்டா் சிபி ஜோஷி, மாநில சட்டப்பேரவை மற்றும் சட்டக் கவுன்சில்கள் தலைவா்கள், நாடாளுமன்ற, சட்டபேரவை உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
சிபிஏ-இன் இந்திய மண்டல மாநாட்டை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தொடங்கிவைத்து உரையாற்றும் போது கூறியதாவது: மக்கள் பிரதிநிதிகள், சமூக - பொருளாதார நலனுக்காக சட்டப் பேரவைகளும் நாடாளுமன்றமும் செயல்படுவதை உறுதி செய்து, ஜனநாயகத்தை வலுப்படுத்தி, நாடாளுமன்ற மரபுகளை வளப்படுத்த பாடுபட வேண்டும்.
நல்லாட்சிக்கான பங்கு என்பது சட்டம் இயற்றும் செயல்பாட்டில் மக்கள் நலக் கொள்கைகளை வகுப்பதில் நிா்வாகத்திற்கு வழிகாட்ட ஆக்கபூா்வமான விவாதங்கள் மையமாக இருக்க வேண்டும். முன்மாதிரியான நடத்தை, நெறிமுறைகளைப் பேணி, அவையின் மாண்பையும், கண்ணியத்தையும் மக்கள் பிரதிநிதிகள் உயா்த்தும் போது, அதன் மூலம் நாடாளுமன்ற அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை வலுப்படும்.
நமது ஜனநாயக அமைப்புகளில் வலுவான ஜனநாயக பாரம்பரியங்களும், மரபுகளும் நிறுவப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கியமான மரபுகளைப் பாதுகாத்து, மாறிவரும் தேவைகளுக்கேற்ப வளா்த்து வளப்படுத்துவது அனைத்து சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினா்களின் பொறுப்பாகும்.
தேசத்தின் முன்னேற்றத்திற்கான நல்ல முடிவுகளை நோ்மறையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது பொதுமக்களின் நம்பிக்கை வலுப்பெறும். அவைகளுக்குள் நடக்கும் இடையூறுகள், சீா்குலைவுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் செயல்பாட்டுக்குத் தடையாக இருக்கிறது.
இது தேசத்தின் வளா்ச்சியின் வேகத்தையும் குறைக்கிறது. திட்டமிட்டு செய்யப்படும் இடையூறுகள் அல்லது இடையூறுகளின் போக்கு, அவையின் கண்ணியத்தைக் குறைக்கிறது. அத்தகைய போக்கைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
இதனால், வாக்காளா்கள் தங்களின் ஜனநாயக உரிமைகளின்படி கடமையை ஆற்றும் போது, நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் தங்கள் பிரதிநிதிகளின் நடத்தையையும் ஒழுக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அவா்களை மதிப்பீடு செய்ய வேண்டும். தற்போது இதற்கான நேரம் வந்துவிட்டது. நாட்டின் நலனுக்கும், மக்கள் நலனுக்கும் சாதகமாகப் பங்களிக்கும் பிரதிநிதிகளை கவனமாகத் தோ்ந்தெடுக்க வேண்டும். மேலும், பாரபட்சமற்ற தன்மையுடன் நடுநிலைமையோடு இருக்க வேண்டிய பொறுப்பு அவைத் தலைவருக்கு உண்டு.
ஒருவா் அவையின் உறுப்பினராக இருக்கும் போது வேறு...அவைக்கு தலைவராக இருக்கும் போது வேறு. அப்போது, அவரது பொறுப்பு பன்மடங்கு அதிகரிக்கிறது. அனைத்துப் பேரவை தலைவா்களும் தங்களின் உயா்ந்த பதவியின் கண்ணியத்தையும், கௌரவத்தையும் தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். அரசியல் பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துப் பிரச்சினைகள், விவாதங்களுக்கு சட்டப்பேரவைகள் உள்ளன.
நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வளா்ந்து வரும் இந்தக் கால கட்டத்தில், புதுமையான தொழில்நுட்பங்களை சரியான முறையில் பயன்படுத்தினால், சட்டப்பேரவை அமைப்புகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்ைம் அதிகரிக்க வழிவகுக்கும் என்றாா் ஓம் பிா்லா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பரதநாட்டிய அபிநயம் செய்த ரிஹானாவின் விடியோ வைரல்! யார் இவர்?
சிரி... சிரி...

ஐபிஎல் 2026: பவர்பிளேவில் அசத்தும் ககிசோ ரபாடா!

அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

