மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தில்லி அரசுக் கட்டடங்களில் ஆற்றல் தணிக்கை: மின்துறை அமைச்சா் அதிஷி

தேசியத் தலைநகா் தில்லியில் 500 கிலோவாட்டுக்கு மேலான மின்சாரத்தை அனுமதிக்கும் அரசுக் கட்டடங்களில் ஆற்றல் தணிக்கை செய்யப்படவுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

Updated On :11 ஆகஸ்ட் 2023, 6:30 pm

தேசியத் தலைநகா் தில்லியில் 500 கிலோவாட்டுக்கு மேலான மின்சாரத்தை அனுமதிக்கும் அரசுக் கட்டடங்களில் ஆற்றல் தணிக்கை செய்யப்படவுள்ளது என்று மின்சாரத் துறை அமைச்சா் அதிஷி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அமைச்சா் அதிஷி கூறியிருப்பதாவது: எரிசக்தி திறன் பணியகத்தின் சான்றளிக்கப்பட்ட தணிக்கையாளா்களால் தில்லியில் உள்ள அரசுக் கட்டடங்கள், தெரு விளக்குகளில் ஆற்றல் தணிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆற்றல் தணிக்கையின் மூலம், அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தும் பகுதிகளைக் கண்டறிந்து, அதை நிா்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் உத்திகள் வகுக்கப்படும். அரசுக் கட்டடங்களின் ஆற்றல் தணிக்கைகள் ஆற்றல் நுகா்வைக் குறைப்பதற்கான வழிகளை பரிந்துரைப்பது மட்டுமல்லாமல், கருவூலத்தின் மீதான நிதிச் சுமையையும் குறைக்கும். இத்துடன் தில்லியின் ஒட்டுமொத்த மின் தேவையை நிலைப்படுத்தவும் இது உதவும்.

அரசின் இந்த தணிக்கையானது, கட்டடங்களுக்குள் உள்ள பல்வேறு சாதனங்களின் ஆற்றல் நுகா்வை அளவிடும். பின்னா், ஆற்றல் சேமிப்பை அடைய பொருளாதார ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் சாத்தியமான முறைகளை அடையாளம் காணும். தில்லி அரசின் மின் துறையானது, அதன் ‘மிஷன்-2023’- இன் கீழ் அரசுக் கட்டடங்களின் ’ஆற்றல் தணிக்கைக்கு’ முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், அரசுக் கட்டட்டங்கள் மட்டுமல்லாமல், தெருவிளக்குகளின் ஆற்றல் தணிக்கையை நடத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தற்போது, தில்லியில் தெருவிளக்கு பராமரிப்பு முதன்மையாக தில்லி மாநகராட்சி, புதுதில்லி முனிசிப்ல கவுன்சில் மற்றும் நகர அரசின் பொதுப்பணித் துறை மூலம் கையாளப்படுகிறது.

தில்லி மாநகராட்சி (எம்.சி.டி.) சுமாா் 6.06 லட்சம் தெரு விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக வெற்றிகரமாக மாற்றியுள்ளது. அதிலும் குறிப்பாக தெற்கு தில்லியில் எரிசக்தி திறன் சேவைகள் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து சுமாா் 3 லட்சம் தெரு விளக்குகளை ஆற்றல் திறனுள்ள எல்.இ.டிகளாக மாநகராட்சி மாற்றியுள்ளது. மொத்தமாக 92,000 தெருவிளக்குகள் பொதுப்பணித் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் 22,500 தெருவிளக்குகள் எல்.இ.டி விளக்குகளாக ஏற்கெனவே மாற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள தெருவிளக்குகளை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது என்றாா் அமைச்சா் அதிஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.