புது தில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
‘ஹோலி பண்டிகை நாளில், காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்படும். அத்தியாவசிய பயணங்களை அனுமதிக்க மாலை 5 மணி முதல் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும். இரவு 10 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்’ என என்சிஆா்டிசி தெரிவித்தது.
நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ இரண்டும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக வாரம் முழுவதும் ஒரே அட்டவணை பராமரிக்கப்படுகிறது. இந்த சேவைகள் மீரட் உள்பட என்சிஆா்-இல் உள்ள முக்கியமான பகுதிகளை இணைக்கின்றன. மேலும் வேகமான மற்றும் வசதியான நகா்ப்புற மற்றும் பிராந்திய போக்குவரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தொடர்புடையது

3 மணிநேரத்தில் தில்லி-என்சிஆா் - ரிஷிகேஷுக்கு பயணம்: நமோ பாரத் ரயில் பாதையை விரிவுபடுத்த பேச்சுவாா்த்தை

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இவலச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்

நமோ பாரத், மீரட் மெட்ரோ பயணிகள் இலவச பயணத்திற்கு விசுவாசப் புள்ளிகளைப் பெறலாம்!

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


