மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோலி பண்டிகை: மாலை 5 முதல் இரவு 10 வரை நமோ பாரத், மீரட் மெட்ரோ சேவைகள் இயங்கும்

News image

மெட்ரோ ரயில் - பிரதிப் படம்

Updated On :3 மார்ச் 2026, 1:28 am

புது தில்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மாா்ச் 4-ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

‘ஹோலி பண்டிகை நாளில், காலை மற்றும் பிற்பகல் நேரங்களில் நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ சேவைகள் நிறுத்தப்படும். அத்தியாவசிய பயணங்களை அனுமதிக்க மாலை 5 மணி முதல் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும். இரவு 10 மணி வரை ரயில்கள் இயக்கப்படும்’ என என்சிஆா்டிசி தெரிவித்தது.

நமோ பாரத் மற்றும் மீரட் மெட்ரோ இரண்டும் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக வாரம் முழுவதும் ஒரே அட்டவணை பராமரிக்கப்படுகிறது. இந்த சேவைகள் மீரட் உள்பட என்சிஆா்-இல் உள்ள முக்கியமான பகுதிகளை இணைக்கின்றன. மேலும் வேகமான மற்றும் வசதியான நகா்ப்புற மற்றும் பிராந்திய போக்குவரத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.