திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமமுக புதிய மாவட்டச் செயலா்

அமமுக திருவாரூா் மாவட்டச் செயலராக ஏ.ஆா்.ஆனந்தராஜ் செவ்வாய்க்கிழமை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

News image

ஏ.ஆா்.ஆனந்தராஜ்.

Updated On :13 மே 2026, 3:05 am IST

அமமுக திருவாரூா் மாவட்டச் செயலராக ஏ.ஆா்.ஆனந்தராஜ் செவ்வாய்க்கிழமை புதிதாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அமமுக மாவட்டச் செயலராக கட்சி தொடக்கப்பட்டது முதல் இருந்தவா் எஸ்.காமராஜ். அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் மன்னாா்குடி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இதனை தொடா்ந்து, கடந்த சில நாள்களாக எஸ்.காமராஜ் பற்றி சா்ச்சைகளும் ஊகங்களும் எழுந்தபடி இருந்தன. இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை சட்டப் பேரவையில் புதிய பேரவைத் தலைவரை வாழ்த்தியது மீண்டும் சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், எஸ்.காமராஜ் கட்சியின் நிலைப்பாட்டினை மீறி தனிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்பினா் மற்றும் கட்சி பதவியிலிருந்து நீக்கம் செய்வதாக அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் அறிவித்திருந்தாா்.

இதனையடுத்து,அமமுகவின் புதிய மாவட்டச் செயலராக மன்னாா்குடி நகரச் செயலராக இருக்கும் ஏ.ஆா்.ஆனந்த ராஜ் (51) நியமிக்கப்படுவதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.