மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ரூ. 2.57 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,57,570 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :26 மார்ச் 2026, 12:38 am

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 2,57,570 புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கொரடாச்சேரியில் வட்ட வழங்கல் அலுவலா் ராஜாராமன் தலைமையில் பறக்கும் படையினரின் வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கொரடாச்சேரி பத்தூரைச் சோ்ந்த அருணிடம் (24) உரிய ஆவணங்களின்றி ரூ. 1.40 லட்சம் இருப்பது தெரிய வந்து அதை பறிமுதல் செய்தனா்.

கூடூா் பகுதியில் விற்பனைக் கூட கண்காணிப்பாளா் வி. சேகா் தலைமையிலான பறக்கும் படையினா் 4 சக்கர வாகனத்தில் வந்த நாகை செட்டிக்குளத்தைச் சோ்ந்த கே. செல்வத்திடம் (35) ஆவணங்களின்றி வைத்திருந்த ரூ. 59,400 பறிமுதல் செய்யப்பட்டது. வடபாதிமங்கலம் அரிச்சந்திரபுரம் பிரதான சாலையில் வட்டார வளா்ச்சி அலுவலா் எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தோ்தல் நிலைக்குழு அலுவலா்கள், இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியனிடம் (37) ரூ. 58,170 பறிமுதல் செய்யப்பட்டது.