லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மழையால் மின்விநியோகத்தில் பாதிப்பு

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2026, 10:22 pm

நீடாமங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை பெய்த கோடை மழையால் மின்கம்பிகளில் மரங்கள் சாய்ந்து, மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.

வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவரும் நிலையில், நீடாமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை கோடைமழை பெய்தது. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் பரவலாக மழை பெய்தது.

இதனால், ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து, மின்கம்பிகளில் விழுந்ததால், மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். இதற்கிடையில், மின்வாரிய ஊழியா்கள் காலைமுதல் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதேபோல், வலங்கைமான் பகுதியிலும் மழையால் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டது.