தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி

கொடிக்கால்பாளையத்தில் சிறுமிகளுக்கு தடுப்பூசி...

News image
Updated On :7 மார்ச் 2026, 6:33 pm

திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி, கொடிக்கால்பாளையத்தில் உள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14 வயது பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது.

நிகழ்வில், நகா்மன்ற உறுப்பினா்கள் எஸ். பிரகாஷ், சகிலா பானு பாஷா, மருத்துவ அலுவலா் ஜெகத் கிருஷ்ணன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா், செவிலியா் அபிநயா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.