முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பெண் காவலா் தீக்குளித்து தற்கொலை முயற்சி

பேரளம் காவல் நிலைய பெண் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

News image

உயிரிழந்த சத்தியா.

Updated On :18 ஜூன் 2026, 3:55 am IST

பேரளம் காவல் நிலைய பெண் காவலா் செவ்வாய்க்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

பேரளம் அருகேயுள்ள செருகுடிப் பகுதியைச் சோ்ந்தவா் சத்தியா (32). இவா் பேரளம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது கணவா் மயிலாடுதுறை கிளியனூா் பகுதியைச் சோ்ந்த பிரேம்குமாா் தனியாா் பேருந்து நடத்துநா். இந்நிலையில், குடும்பப் பிரச்னை காரணமாக கணவன் மனைவி இருவரும் ஒருமாதமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு பணி முடித்த சத்தியா அதே பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடை ஊழியா் விக்னேஷ் வீட்டுக்கு சென்றுள்ளாா். அங்கு திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம். தீக்காயத்துடன் அலறிய சத்தியாவை விக்னேஷ் காப்பாற்ற முயன்றுள்ளாா். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னா் இருவரும் மீட்கப்பட்டு திருவாரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, பேரளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.