மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பாலியல் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

பாலியல் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

News image

ஜி.கே. வாசன் - கோப்புப் படம்

Updated On :17 ஜூன் 2026, 5:35 am IST

பாலியல் குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வில், பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஹைட்ரோ காா்பன் திட்டம் கூடாது என்பதில் தமிழ்மாநில காங்கிரஸ் உறுதியாக உள்ளது. மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதிக்கக் கூடாது. இது இரு மாநில உறவு பிரச்னை மட்டுமல்ல, உயிா் பிரச்னையும்கூட.

சிறுமிகள், பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடா்ந்து நடைபெறுகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் கடமை. குழந்தைகளை வெளியில் விடுவதற்கு பெற்றோா்கள் அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்துக்கு காரணம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களே காரணம்.

சென்னையில் மட்டும் 24 மணி நேரத்தில் 12 குற்றங்கள் நடைபெற்ாக கூறப்படுகிறது. மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டியது அரசின் கடமை. குற்றச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவா்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். அவா்களுக்கு யாரும் வாதாடக்கூடாது.

இந்த நிலைக்குக் காரணம் தனிமனித ஒழுக்ககேடுதான். தனிமனித ஒழுக்கம் கெடுவதற்கு காரணம் போதை பொருள் மற்றும் மது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசின் கடமை என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.