நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வேளாண் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:14 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டம், கீழ்வேளூா் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் ஜனனி, ஜெயந்தி, காா்குழலி, மாலினி, ப்ரீத்தி, சுஜிப்ரியா, ரோஷினி, யோகேஸ்வரி ஆகியோா், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரில் இலை நிற அட்டவணை மற்றும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டா் குறித்து விவசாயிகளுக்கு செய்முறை விளக்கம் நடத்தினா்.

இதில், இலை நிற அட்டவணையை பயன்படுத்தும் முறை, அதன் பயன்கள், யூரியா உரத்தை பயன்படுத்த பரிந்துரைக்கப்படும் அளவு குறித்து விளக்கப்பட்டது. மேலும் டி.என்.ஏ.யூ பயிறு வொண்டரின் நன்மைகள் மற்றும் அது விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது.