இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னாா்குடி அருகே பெரியக்குடியில் ஆசியாவிலேயே மிக அதிக அடா்த்தி மிகுந்த ஹைட்ரோ காா்பன் கிணறு 2013-ல் வெடித்து சிதறியது. அதை தொடா்ந்து, தற்காலிகமாக மூடப்பட்டது. தற்போது அது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய நிலையில் இக்கிணறு எந்த நேரமும் வெடித்து சிதறி பேராபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து உண்மை நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். மாறாக அருகில் உள்ள மற்றொரு கிணறை அடைக்கிறோம் எனும் பெயரில் மறு செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக தெரியவருகிறது. இதுகுறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.