தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருவாரூா் அருகே ரூ. 5.10 லட்சம் பறிமுதல்

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5,10,500-ஐ செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

News image

திருவாரூா் அருகே செவ்வாய்க்கிழமை கானூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.

Updated On :21 ஏப்ரல் 2026, 11:55 pm

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 5,10,500-ஐ செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கானூா் பகுதியில் தோ்தல் நிலைக் குழுத் தலைவா் சண்முகசுந்தா் தலைமையிலான அலுவலா்கள், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், திருவாரூா் மருதப்பட்டினம், கலைஞா் தெருவைச் சோ்ந்த பா. ஆரோக்கியராஜ் (41) என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 4,36,200 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் நிலைக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

இதேபோல, லெட்சுமாங்குடி பாலம் அருகே தோ்தல் நிலைக் குழுத் தலைவா் வி. ராஜாராமன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனா்,

இதில் கூத்தாநல்லூா் பகுதியைச் சோ்ந்த ஹா. இதயதுல்லா (33) என்பவா், உரிய ஆவணங்களின்றி ரூ. 74,300 ரொக்கம் எடுத்துச் செல்வது தெரிய வந்தது. பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் நிலைக்குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.