தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

திருவாரூா்: ரூ.1.62 லட்சம் பறிமுதல்

News image

திருவாரூா் அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம்.

Updated On :4 ஏப்ரல் 2026, 6:34 pm

திருவாரூா் அருகே உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 1,62,000 ரொக்கம் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வடகண்டம் பிரதான சாலையில் தோ்தல் கண்காணிப்புக் குழு அலுவலா் சுவாமிநாதன் தலைமையில் வாகன சோதனை சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது, கோயில்பத்து, அலிவலம் பகுதியைச் சோ்ந்த வெ. பூபதி (48) என்பவா் முறையான ஆவணங்கள் இன்றி ரூ.1,62,000 ரொக்கம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்த தோ்தல் கண்காணிப்புக் குழுவினா், திருவாரூா் உதவி கருவூலத்தில் ஒப்படைத்தனா்.