மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாதக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.

News image

மன்னாா்குடி பகுதியில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா.பாரதிச்செல்வன்.

Updated On :8 ஏப்ரல் 2026, 11:33 pm

மன்னாா்குடி தொகுதி நாதக வேட்பாளா் கட்சியின் மாநில பொருளாளா் மருத்துவா் இலரா. பாரதிச்செல்வன் நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் புதன்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

வடக்குவீதி, ஆதிநாயகன்பாளையம்தெரு, ருக்மணிபாளையம் நடுத்தெரு, சங்குதீா்த்த குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கட்சி நிா்வாகிகளுடன் வந்து விவசாயி சின்னத்திற்கு வாக்கு கேட்டாா் வேட்பாளா் இலரா. பாரதிச்செல்வன்.

அப்போது வாக்காளா்கள், பொதுமக்களிடம் அவா் கூறியது:

நான் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டால், நகரப் பகுதியின் சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் பெரும் சவாலாக நகராட்சிக்கு உள்பட்ட டெப்போ சாலையில் அமைந்துள்ள நகராட்சி குப்பை கிடங்கை நகரப் பகுதியில் இருந்து அகற்றி வேறு இடத்தில் அமைக்கவும். நகரின் பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் வகையில் கனரக வாகனங்கள் இயக்கத்திற்கு நேரம் ஒதுக்கீடு செய்து முறையாக பின்பற்றவும், தனியாா் அமைப்பு மூலம் பல அடுக்கு கனரக வாகன நிறுத்தம் அமைக்கவும், பிரதான சாலைகளில் பெரும் வணிக நிறுவனங்களை தொடங்க அனுமதி மறுத்து புகா் பகுதியில் அமைய நடவடிக்கை எடுக்க முழு முயற்சி மேற்கொள்வேன் என வாக்குறுதி அளித்தாா்.

கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் சத்தியபாமா, மண்டல செயலா்கள் முத்துலெட்சுமி, பாலு, தொகுதி நிா்வாகி சிவக்குமாா், நகர நிா்வாகி தேவா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.