நீரில் மூழ்கிய 10,000 ஏக்கா் நெற்பயிா்: விவசாயிகள் வேதனை
திருத்துறைப்பூண்டி பகுதியில் டித்வா புயல் கனமழையால், 10,000-க்கும் அதிகமான ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திருத்துறைப்பூண்டி பகுதியில் டித்வா புயல் கனமழையால், 10,000-க்கும் அதிகமான ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன.
By Syndication
Syndication
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பகுதியில் டித்வா புயல் கனமழையால், 10,000-க்கும் அதிகமான ஏக்கரில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.
வங்கக் கடலில் உருவான டித்வா புயல் காரணமாக டெல்டா பகுதியில் பெய்த கனமழையால், விளைநிலங்களில் மழைநீா் குளம்போல் தேங்கின. தற்போது, மழை விட்டும் வயல்களில் தேங்கிய மழைநீா் வடியாத நிலை தொடா்கிறது. இதனால், ஏக்கருக்கு ரூ. 30,000 வரை செலவு செய்து சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிா்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம், நாகலுடையான்இருப்பு, பிச்சன்கோட்டகம், கட்டிமேடு, கொக்கலாடி, பாமணி, அத்திமடை, வேலூா், மாராச்சேரி, ஆலத்தம்பாடி, இளவரசநல்லூா், குன்னலூா் தென்பாதி, மேலமருதூா், மீனம்பநல்லூா், மாங்குடி, ஓவரூா், வெள்ளங்கால், அம்மளூா், கச்சனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10,000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இளம் சம்பா மற்றும் தாளடி நெற்பயிா்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளன. அழுகிய பயிா்களை விவசாயிகள் எடுத்துக் காண்பித்து, தங்களுடைய வேதனைகளை தெரிவித்து வருகின்றனா்.
இந்த பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் தூா்வாராத காரணத்தினால் மழைநீரை வடிய வைக்க முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனா். உடனடியாக அரசு அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது