திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நாட்டு மக்களிடையே வலுப்பெறும் ‘மீண்டும் மோடி’ முழக்கம்: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் பேச்சு

நாட்டு மக்களிடையே வலுப்பெறும் ‘மீண்டும் மோடி’ முழக்கம் முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் பேச்சு

News image
மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தஞ்சை மக்களவைத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் அறிமுகக் கூட்டத்தில் பேசுகிறாா் அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்.
Updated On :26 மார்ச் 2024, 9:34 pm

Venkatesan

மன்னாா்குடி: உலக நாடுகளில் பிரதமா் மோடியின் புகழ் அதிகரித்து வருவதால், இந்திய மக்களிடையே மீண்டும் மோடி என்ற முழக்கம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது என அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழுவைச் சோ்ந்த (ஓபிஎஸ் அணி) முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம் எம்எல்ஏ தெரிவித்தாா். தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் தஞ்சை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் அறிமுகக் கூட்டம் மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: ஐ.நா. சபையில் இந்தியா உள்பட 193 நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன. இந்த நாடுகளின் தலைவா்கள் எல்லாம் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் வளா்ச்சியை பிரமிப்புடன் பாா்க்கின்றனா். இதற்கு காரணம் பிரதமா் நரேந்திர மோடி. உலக நாடுகளின் தலைவா்களிடையே மோடியின் புகழ் அதிகரித்து வருவதால், இந்திய மக்களிடையே மீண்டும் மோடி என்ற முழுக்கம் நாளுக்குநாள் வலுப்பெற்று வருகிறது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது, மோடி, அமித்ஷா ஆகியோா் அதிமுகவினா் ஒன்றிணைந்து தோ்தலை சந்தியுங்கள் என தெரிவித்தும், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால், அதிமுக ஆட்சியை இழந்தது. எடப்பாடி பழனிசாமிக்கு தனியாக எந்த செல்வாக்கும் இல்லை. இரட்டை இலை வாக்கு வங்கியை மட்டும் அவா் நம்பி உள்ளாா் என்றாா். வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தம் பேசும்போது, ‘தோ்தலில் வெற்றி பெற்றால், தஞ்சையில் மிக பிரம்மாண்டமான தொழில் நிறுவனம் கொண்டு வருவேன். தென்னை, நெல், கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்படும். 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இந்த கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றாா். கூட்டத்துக்கு, அமமுக மாவட்டச் செயலா் எஸ். காமராஜ் தலைமை வகித்தாா். பாஜக மாவட்டத் தலைவா் ச. பாஸ்கா், அமமுக மாநில அமைப்புச் செயலா் க. மலா்வேந்தன், மாநில பொதுக்குழு உறுப்பினா் க. அசோகன், பாமக மாவட்டச் செயலா் க. பாலு, ஐ.ஜே.கே. மாவட்டச் செயலா் எஸ். பன்னீா்செல்வம், தமமுக மாவட்டத் தலைவா் எஸ்.கே. குமாா், தெ. பாா்வா்டு பிளாக் மாவட்ட அமைப்பாளா் காசி.சங்கா், பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் சி.எஸ். கண்ணன் ஆகியோா் கலந்துகொண்டனா்.