நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

கீழ்வேளூா்: டாஸ்மாக் காலி பாட்டில் அட்டைப் பெட்டி குடோனில் தீ விபத்து

கீழ்வேளூா் அருகே டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் அட்டைப் பெட்டி அடுக்கி வைக்கும் கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.

Updated On :21 மே 2026, 7:26 am IST

கீழ்வேளூா் அருகே டாஸ்மாக் கடையை ஒட்டி உள்ள காலி மது பாட்டில்கள் மற்றும் அட்டைப் பெட்டி அடுக்கி வைக்கும் கட்டடத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

கீழ்வேளூா் அருகே வடக்குவெளி பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. ஒரே கட்டடத்தில் மதுபான விற்பனைக் கடையும், அதையொட்டி அட்டைப் பெட்டிகள், காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கும் அறையும் உள்ளன.

இந்நிலையில், புதன்கிழமை அட்டைப் பெட்டிகள், காலி மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீப்பிடித்துள்ளது.

அப்பகுதி மக்கள் கீழ்வேளூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனா். மதுபாட்டில்கள் இருக்கும் அறைக்கு தீ பரவும் முன்பு தீயை அணைத்ததால் மதுபாட்டில்கள் தீயில் இருந்து தப்பின.

இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளா் கோபால், கீழ்வேளூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடையில் வைத்திருந்த காலி அட்டைப் பெட்டிகள் 2,500 மற்றும் காலி மதுபாட்டில்கள் 5,300 ஆகியவை தீயில் சேதமடைந்ததாகத் தெரிவித்துள்ளாா்.

கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.

தீயை கட்டுக்குள் கொண்டுவரும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.