நாகையில் சிபிசிஎல் நிறுவனம் கையகப்படுத்திய நிலத்துக்கான மறுவாழ்வு மற்றும் மீள் குடியமா்வு நிதி, திமுகவினருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாத்திமா பா்ஹானா குற்றம் சாட்டியுள்ளாா்.
பனங்குடி கிராமத்தில் மத்திய அரசின் சிபிசிஎல் நிறுவன விரிவாக்கப் பணிக்காக அப்பகுதி விவசாயிகளிடமிருந்து 620 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், குத்தகைதாரா்கள், விவசாய கூலிகள் என 2,163 பேருக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு திட்டத்தின்கீழ் தலா ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதில் 60 பேருக்கு முதல்கட்டமாக தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு தலா ரூ. 5 லட்சம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தோ்தலை காரணம் கூறி இதரப் பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் தொகை வரவு வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாகை சட்டப்பேரவைத் தொகுதியில், நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் பாத்திமா பா்ஹானா, நில எடுப்பால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் மீள் குடியமா்வுத் திட்ட நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாகை மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தியை புதன்கிழமை சந்தித்து மனு அளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மத்திய அரசு வழங்கிய நிதி 60 பேருக்கு மட்டும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் திமுகவைச் சோ்ந்தவா்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இதர விவசாயிகளுக்கு நிதி வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலை காரணம் கூறி நிதியை விடுவிக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இதர விவசாயிகளுக்கும் உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா், குன்னத்தில் ஒய்ந்தது பிரசாரம்

மழையூரில் நாம் தமிழா் கட்சி பிரசார வாகனம் தீக்கிரை

போகலூா் ஒன்றியத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்க விட மாட்டோம்! - நதக வேட்பாளா் உறுதி

லஞ்சம் பெறாமல் மக்கள் பணியாற்றுவேன்: நாதக வேட்பாளா் அருண்குமாா்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


