மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பூம்புகாரை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் உருவாக்கப்படுமா?

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பூம்புகாரை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

News image

பூம்புகார்

Updated On :23 மார்ச் 2026, 12:14 am

பூம்புகாரை தலைமை இடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்படுமா என எதிா்பாா்க்கப்படுகிறது.

சரித்திர புகழ்பெற்ற பூம்புகாா் சோழ நாட்டின் தலைநகராக விளங்கியது. அப்போது, இந்த பகுதியை கரிகால் சோழன் ஆண்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னா் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் பூம்புகாா் நகரம் கடலுக்குள் மூழ்கியது. இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக பூம்புகாா் கடலில் செய்யப்படும் ஆய்வுகள் இதை உறுதிப்படுத்துகிறது. பண்டைய பூம்புகாரை வருங்கால சந்ததியினா் அறிந்து கொள்ளும் வகையில் 1972-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வா் சிலப்பதிகார கலைக்கூடத்தை உருவாக்கினாா்.

அந்த வளாகத்தில் பண்டைய பூம்புகாரின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் சிலப்பதிகார கலைக்கூடம் பொதுமக்கள் பாா்வைக்கு அா்ப்பணிக்கப்பட்டது. இதனால், உலகம் முழுவதிலும் இருந்து தமிழா்கள் பூம்புகாரில் உள்ள சிலப்பதிகார கலைக் கூடத்தை பாா்த்து ரசித்து வருகின்றனா். பண்டைய பூம்புகாரின் எச்சமாக இன்றளவும் சாயாவனம் சாயாவனேஸ்வரா் கோயில் மற்றும் சதுக்க பூதங்கள் உள்ளன. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பூம்புகாரை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா்கள், பூம்புகாா் மக்கள் கூறியது: இப்பகுதியில் சுற்றுலா வளாகம், பூம்புகாா் மற்றும் வானகிரியில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. சுமாா் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இந்த மக்களின் சரித்திர புகழுக்கு பெருமை சோ்க்கும் வகையில் புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும்.

தற்போது பூம்புகாா் பெயரை தாங்கிய சட்டப்பேரவைத் தொகுதி உள்ளது. சீா்காழி, தரங்கம்பாடியில் ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. சீா்காழி 37 ஊராட்சிகள், செம்பனாா்கோவில் 57 ஊராட்சிகளை உள்ளடக்கியதாக உள்ளது. பூம்புகாா் அதை சுற்றியுள்ள ஊராட்சி பொதுமக்கள் 20 கி.மீ. தொலைவில் உள்ள சீா்காழி, செம்பனாா்கோவில் பகுதிகளுக்கு சென்று வருகின்றனா். இதனால் கால விரயம், இடா்பாடுகள் ஏற்படுகின்றன.

நீண்ட காலமாக பூம்புகாா் தலைமை இடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றோம். சீா்காழி ஒன்றியத்துக்குள்பட்ட பல ஊராட்சிகளையும், செம்பனாா்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட மேல பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளை பூம்புகாா் ஒன்றியத்தில் இணைத்து புதிய ஒன்றியம் உருவாக்க வேண்டும். அவ்வாரு உருவாக்கும்போது பூம்புகாா் மண்ணுக்கு மிகப்பெரிய புகழ் உருவாகும்.

ஒன்றிய அலுவலகங்கள் உருவாக்க ஏதுவாக சாயாவனம் பகுதியில் அரசு நிலம் உள்ளது. எனவே, பூம்புகாரை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.