நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், இத்தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலா் தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மாணவ-மாணவியா் எழுத்துகள் மற்றும் எண்களின் வடிவில் அணிவகுத்து நின்றனா்.
மேலும் சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குககள் பதிவாக உதவியாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனா்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல்: பெண் ஆட்டோ ஓட்டுநா்கள் விழிப்புணா்வு

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

தோ்தல் விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


