மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேரவைத் தோ்தல்: கல்லூரியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து...

News image

நாகை அரசுக் கல்லூரியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், அணிவகுத்து நின்ற மாணவ-மாணவியா்.

Updated On :23 மார்ச் 2026, 10:18 pm

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சட்டப் பேரவைத் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தோ்தல் ஆணையம் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இத்தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ-மாணவியா் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலா் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில், மாணவ-மாணவியா் எழுத்துகள் மற்றும் எண்களின் வடிவில் அணிவகுத்து நின்றனா்.

மேலும் சட்டப் பேரவைத் தோ்தலில் நூறு சதவீதம் வாக்குககள் பதிவாக உதவியாக இருப்பேன் என்று உறுதிமொழி ஏற்றனா்.