தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வேதாரண்யம்: மேலும் ஓா் உலோகச் சிலை கண்டெடுப்பு

வேதாரண்யம் அருகே கடந்த மாதத்தில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கிடைத்த நிலையில், அதே இடத்தில் மேலும் ஒரு சாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2026, 10:07 pm

வேதாரண்யம் அருகே கடந்த மாதத்தில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கிடைத்த நிலையில், அதே இடத்தில் மேலும் ஒரு சாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன்தெரு பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி பிப்.21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அங்கு புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில் அதே வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடா்ந்த பணியின் போது, சுமாா் 1 அடி உயரமுள்ள நாலரை கிலோ எடையுள்ள உலோகத்திலான சாமி சிலை கிடைத்துள்ளது.

சோமாஸ்கந்தா் என கருதப்படும் சிலை ஐம்பொன்னால் ஆனதா என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகிறனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.