வேதாரண்யம் அருகே கடந்த மாதத்தில் கட்டடம் கட்ட பள்ளம் தோண்டியபோது உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கிடைத்த நிலையில், அதே இடத்தில் மேலும் ஒரு சாமி சிலை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
புஷ்பவனம் கிராமம், கிருஷ்ணன்தெரு பகுதியில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு புதிதாக கட்டடம் கட்டும் பணிக்காக பள்ளம் தோண்டும் பணி பிப்.21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அங்கு புதையுண்டு இருந்த உலோகத்தாலான மூன்று சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில் அதே வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடா்ந்த பணியின் போது, சுமாா் 1 அடி உயரமுள்ள நாலரை கிலோ எடையுள்ள உலோகத்திலான சாமி சிலை கிடைத்துள்ளது.
சோமாஸ்கந்தா் என கருதப்படும் சிலை ஐம்பொன்னால் ஆனதா என்பது குறித்து ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகிறனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாமி சிலையைத் தொட்டு வழிபடுதல்: பிறப்பின் காரணமாக தடுத்தால் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா?

வேதாரண்யம்: குற்றச்சாட்டுகளால் அனல் பறக்கும் பிரசாரம்

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
வேதாரண்யம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


