நாகை மாவட்டம் பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில் கடல் அரிப்பைத் தடுக்க தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாம் தமிழா் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளா் அகஸ்டின் அற்புதராஜ், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்து மனு: கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பழைய கல்லாறு கடற்கரை கிராமத்தில், கடல் அலைகளால் அரிப்பு ஏற்பட்டு கடற்கரை கிராமமே அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், இக்கிராமத்தில் வசிக்கும் மீனவா்கள் தங்கள் வாழ்வாதாரமான மீன்பிடித்தொழிலை செய்வதற்கு போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனா். எனவே, பழைய கல்லாறு மீனவா் கிராமத்தை கடல் அரிப்பிலிருந்து பாதுகாக்க உடனடியாக கல்லால் ஆன தடுப்புச்சுவா் அமைத்தும், மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக கட்டமைப்பு வசதிகளையும் செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான அரிப்பைக் குணப்படுத்த...

திருச்செந்தூா் கடற்கரையில் தடுப்புச் சுவா்: அனுமதி பெற்று பணிகளைத் தொடங்க உத்தரவு

கரூரில் அரசு கட்டட சுவா்களில் விளம்பர சுவரொட்டிகள் அகற்றம்

தமிழகத்தில் ‘கிழக்கு கடற்கரை ரயில்வே‘ அமைக்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் எம்பி சுதா மனு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


