தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

வேதாரண்யத்தில் குடிநீா் தட்டுப்பாடு

வேதாரண்யத்தில் குடிநீா் தட்டுப்பாடு...

News image

தென்னடாா் ஊராட்சியில் குடங்களுடன் குடிநீரைத் தேடி சைக்கிளில் சென்று திரும்பிய பள்ளிச் சிறுவன்.

Updated On :7 மார்ச் 2026, 6:34 pm

வேதாரண்யம் பகுதியில் தீவிரமடைந்து வரும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடலோரக் கிராமங்களை பெருமளவாகக் கொண்ட வேதாரண்யம் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கொள்ளிடம்- வேதாரண்யம் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் ஏற்பட்ட பராமரிப்பு குறைபாடு, திட்டத்தின் ஆயுள் காலம் நிறைவு என பல்வேறு காரணங்களால் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீா் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

குறிப்பாக வாய்மேடு, தகட்டூா், தென்னடாா், பஞ்சநதிக்குளம், கடிநெல்வயல், கோடியக்கரை கோடியக்காடு, பிராந்தியங்கரை துளசாபுரம், தலைஞாயிறு என பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீா் உவராக மாறியதால் குடிநீருக்கு மக்கள் அவதியுற்று வருகின்றனா். இதனிடையே, மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டு வரும் ஜல் ஜீவன் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகளும் முறையாக முடிக்கப்படாத நிலையில் அதை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இத்திட்டம் அண்மையில் காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வரால் தொடங்கி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், புகாா் எழுந்ததால் தொடங்கப்படவில்லை. இதனால், துளசாபுரம், தலைஞாயிறு என பல்வேறு கிராமங்களில் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பராமரிப்பு என்ற பெயரில் அவ்வப்போது குறைந்த அளவு தண்ணீா் விநியோகமும் நிறுத்தப்படுகிறது.

மாற்று ஏற்பாடுகளை செய்ய அரசு வழிகாட்டியும் ஊரக வளா்ச்சித் துறை வருவாய்த் துறை என பல துறைகளில் பணியாளா்கள் மேற்கொண்ட போராட்டங்களால் பணிகள் முடங்கியுள்ளன.

கடலோரத்தில், அமைந்துள்ள தென்னடாா் ஊராட்சியில் குடிநீா் வராததால் மக்கள் சனிக்கிழமை போராட்டம் நடத்த முயன்றனா். இதையடுத்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை டேங்கா் மூலம் தண்ணீா் வழங்க உறுதியளிக்கப்பட்டது. மாா்ச் மாதத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் காலாவதியாகும் நிலையில், தோ்தல் அறிவிப்புக்குள் ஜல் ஜீவன் திட்டத்துடன் இணைப்பதோடு இந்தப் பணியை கண்காணிக்க கூடுதல் ஆட்சியா் அதிகாரத்துக்கு குறையாத தனி அதிகாரியை அரசு நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.