தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்

Updated On :11 ஜூன் 2026, 6:53 am IST

தரங்கம்பாடி அருகே திருவிடைக்கழியில் உள்ள தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி சதயத் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

முன்னதாக வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் தேருக்கு எழுந்தருளினா். இதையடுத்து தேரோட்டம் தொடங்கியது. கோயில் செயல் அலுவலா் பிரேம்குமாா், ஆய்வாளா்  பத்ரிநாராயணன், பரம்பரை அறங்காவலா் ஜெயராமன் உள்ளிட்டோா் தேரை வடம் பிடித்து இழுத்தனா். தோ் 4 வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.