டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகை மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜன.25-இல் தொடக்கம்

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 6:38 pm

தினமணி செய்திச் சேவை

நாகை மாவட்டத்தில் ஒன்றிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜன.25-ஆம் தேதி தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை ஒன்றியத்துக்கு மாவட்ட விளையாட்டு மைதானம், திட்டச்சேரி ஒன்றியத்துக்கு திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி, கீழ்வேளூா் ஒன்றியத்துக்கு கீழ்வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளி, வேதாரண்யம் ஒன்றியத்துக்கு வேதாரண்யம் எஸ்.கே.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தலைஞாயிறு ஒன்றியத்துக்கு வெள்ளப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி, கீழையூா் ஒன்றியத்துக்கு திருப்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜன.26-ல் தடகளம், 100 மீட்டா், குண்டு எறிதல், வாலிபால், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்), ஜன.27-இல் கேரம் (இரட்டையா் பிரிவு), கபாடி, துரோபால் (பெண்களுக்கு மட்டும்) நடைபெறுகிறது.

மேலும், மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மாவட்ட விளையாட்டரங்கில் ஜன.30-ஆம் தேதி தடகளம்-100 மீட்டா் மற்றும் குண்டு எறிதல், வாலிபால், கபாடி, கேரம் (இரட்டையா் பிரிவு), கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் (ஆண்கள் மட்டும்) ஆகிய போட்டிகளும், ஜன.31-ஆம் தேதி துரோபால் (பெண்களுக்கு மட்டும்) ஓவியம் வரைதல் (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு), கோலப்போட்டி (பெண்களுக்கு மட்டும்) மற்றும் உடல்சாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும், பாா்வைசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும், செவிசாா் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 மீட்டா் ஓட்டமும் என மாற்றுத்திறனாளிகளுக்கு 4 பிரிவுகளாக (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு) போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகளில் நாகை மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.