நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா புதிய 50 அடி உயர கம்பத்தில் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

News image
~
Updated On :21 ஜனவரி 2026, 11:44 pm

தினமணி செய்திச் சேவை

வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா புதிய 50 அடி உயர கம்பத்தில் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித செபஸ்தியாா் ஆலயத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்திற்காக புதியதாக 50 அடி உயர கொடிக் கம்பம் ஆலய வளாகத்தில் நிறுவப்பட்டது.

வேளாங்கண்ணி பேராலய பங்குத் தந்தை எஸ். அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடா்ந்து, கொடி பாடல் ஒலிக்க, புதிய கொடிமரத்தில் புனிதம் செய்யப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது, புனித செபஸ்தியாா் ஆலயம் முழுவதும் மின் விளக்குகள் ஒரே நேரத்தில் ஒளிர விடப்பட்டது.

முன்னதாக பூரண கும்ப மரியாதை, சிறப்பு திருப்பலி உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கத்தோலிக்க முக்குலத்தோா் சமூகத்தினா் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு பிராா்த்தனை செய்தனா்.