திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

சென்னை - ராமேசுவரம் பொங்கல் சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டி

சென்னை - ராமேசுவரம் இடையே திருவாரூா் வழியாக இயக்கப்படும் பொங்கல் சிறப்பு ரயிலில் கூடுதலாக 2 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜனவரி 2026, 10:56 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை - ராமேசுவரம் இடையே திருவாரூா் வழியாக இயக்கப்படும் பொங்கல் சிறப்பு ரயிலில் கூடுதலாக 2 முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சிக் கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பொங்கல் பண்டிகையையொட்டி தெற்கு ரயில்வே பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ராமேசுவரம் - தாம்பரம் (06106) இடையே ஜன. 13 மற்றும் ஜன. 20 ஆகிய தேதிகளிலும், தாம்பரம் - ராமேசுவரம் (06105) இடையே ஜன. 14 மற்றும் ஜன. 21 ஆகிய தேதிகளில் பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயிலில் மூன்று அடுக்கு குளிா் சாதனப் பெட்டிகள் 3, படுக்கை வசதி பெட்டிகள் 9, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் 5, சரக்கு பெட்டி 1 இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக முன்பதிவில்லாத பொது பெட்டிகள் 2 இணைக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளாா்.