நாகை மாவட்டத்தில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இல்லை
நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.


நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஏற்கெனவே பராமரிப்பில் உள்ள நீருந்து குழாயிலிருந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் புதிய இணைப்பு பணிகள் கீழ ஒதியத்தூா், ஓா்குடி பகுதிகளில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் மற்றும் மின் மோட்டாா் அறையில் புதிய மின் மோட்டாா் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
இதனால், புதன்கிழமை (பிப்.18) முதல் பிப்.20-ஆம் தேதி வரை நாகை நகராட்சி, கீழ்வேளுா், வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூா், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...