டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நாகை மாவட்டத்தில் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இல்லை

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

News image
குடிநீர் நிறுத்தம்- கோப்புப் படம்
Updated On :17 பிப்ரவரி 2026, 11:26 pm

தினமணி

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை முதல் 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்த அலுவலகம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 893 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ஏற்கெனவே பராமரிப்பில் உள்ள நீருந்து குழாயிலிருந்து ஜல் ஜீவன் மிஷன் திட்டம் மூலம் புதிய இணைப்பு பணிகள் கீழ ஒதியத்தூா், ஓா்குடி பகுதிகளில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் மற்றும் மின் மோட்டாா் அறையில் புதிய மின் மோட்டாா் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதனால், புதன்கிழமை (பிப்.18) முதல் பிப்.20-ஆம் தேதி வரை நாகை நகராட்சி, கீழ்வேளுா், வேளாங்கண்ணி பேரூராட்சிகள் மற்றும் கீழையூா், தலைஞாயிறு, திருமருகல் ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.