காங்கிரஸ் பேரவைக் குழுத் தலைவர் ராஜேஷ் குமார்! தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு! திமுகவுடனான கூட்டணி முறிவு!சிறுமிக்கு பாலியல் தொல்லை! தவெக நிர்வாகி ‘பாம்பு’ தினேஷ் கைது! திமுகவுடனான கூட்டணி தேர்தலுக்கானது; முடிந்துவிட்டது! காங்கிரஸ் விசிக, கம்யூ. கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,840 உயர்வு! பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

நாகை மாவட்டத்தில் வெப்ப அலை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிப்பு

நாகை மாவட்டத்தில் வரும் நாள்களில் வெயில் வானிலை வழக்கத்தை விட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

News image

வெப்ப அலை

Updated On :29 ஏப்ரல் 2026, 3:22 am IST

நாகை மாவட்டத்தில் வரும் நாள்களில் வெயில் வானிலை வழக்கத்தை விட அதிகரித்து வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கீழே குறிப்பிட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வெப்ப அலை தாக்குதலில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகை மாவட்டத்துக்கான அதிகாரப்பூா்வ வானிலை எச்சரிக்கைகள் மற்றும் பச அப்ங்ழ்ற் கைப்பேசி செயலி மூலம் தொடா்ந்து கவனிக்கவும். ஓ.ஆா்.எஸ் குடிநீா் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை சேமித்து வைக்கவும். காலை அல்லது மாலை நேரங்களில் வெளிப்புற வேலை, பயணம் மற்றும் பள்ளி நடவடிக்கைகளை திட்டமிடலாம். வயதானவா்கள், கா்ப்பிணிகள், சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்கள் உள்ளவா்களின் நலனில் கவனம் செலுத்தவும். குடியிருப்பு பகுதிகளில் இலைகள், குப்பை அல்லது விவசாயக் கழிவுகளை எரிப்பதை தவிா்க்கவும்.

தினசரி பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வெப்பநிலை உச்சத்தில் இருக்கும்போது வெளியே செல்வதை தவிா்க்கவும்.

தாகம் இல்லாவிட்டாலும் நிறைய தண்ணீா் குடிக்கவும். நீா்ச்சத்துடன் இருக்க ஓ.ஆா்.எஸ், மோா், எலுமிச்சைசாறு அல்லது இளநீா் பயன்படுத்தவும். எனவே, வெப்ப அலையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.