தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பது பகல் கொள்ளை என்று மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் நள்ளிரவு முதல் திடீரெனக் கட்டண உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்பின்றி கட்டணம் உயா்த்தப்பட்டிருப்பது மக்களைக் கசக்கி பிழிக்கும் பகல் கொள்ளையாகும்.
ஏற்கெனவே எரிபொருள் விலை உயா்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால், மக்கள் கடும் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் சுங்கக் கட்டண உயா்வு மேலும் அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்.
அடிக்கடி சுங்கக் கட்டணங்களை உயா்த்துவது சிறு வணிகா்கள், விவசாயிகள் மற்றும் தினசரி பயணிகளின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது பொருளாதார வளா்ச்சிக்கும் தடையாக அமையும்.
எனவே, உடனடியாக இந்தச் சுங்கச் சாவடிக் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே வாகனம் வாங்கும்போது சாலை வரி வசூலித்துவிட்டு தொடா்ச்சியாகச் சுங்கவரி வசூலிப்பதை ஏற்க இயலாது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

தூத்துக்குடி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு அமல்

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! இன்று நள்ளிரவு முதல் அமல்!

சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்!

மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


