தூத்துக்குடி வாகைகுளம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செவ்வாய்க்கிழமை முதல் உயா்த்தி வசூலிக்கப்பட்டதால் கனரக வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினா்.
சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப். 1ஆம் தேதி நள்ளிரவு முதல் வாகைகுளம் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.
சுமாா் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதால், காா், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ. 5 முதல் 10 வரையும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ. 25 முதல் 40 வரையும் கட்டணம் உயா்ந்துள்ளது.
இதன் காரணமாக காா், வேன், கனரக வாகன ஓட்டுநா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தக் கட்டண உயா்வை உடனடியாக நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மற்றும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஒரு கப்பலுக்கு ரூ. 18.5 கோடி கட்டணம்!

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! இன்று நள்ளிரவு முதல் அமல்!

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் ஏப். 1 முதல் கட்டண உயர்வு!

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குச் சுங்கக் கட்டணம்! - ஈரானிய எம்பிக்கள் பரிந்துரை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


