18 Dec, 2025 Thursday, 08:56 AM
The New Indian Express Group
நாகப்பட்டினம்
Text

டித்வா புயல் எதிரொலி: பல கோடி மீன் வா்த்தகம் பாதிப்பு

PremiumPremium

டித்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவா்கள் கடந்த 6 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் பலகோடி மதிப்புள்ள மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Rocket

வேளாங்கண்ணியில் சீற்றத்துடன் காணப்பட்ட கடல்.

Published On30 Nov 2025 , 1:00 AM
Updated On30 Nov 2025 , 1:00 AM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

டித்வா புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் மீனவா்கள் கடந்த 6 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் பலகோடி மதிப்புள்ள மீன் வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

டித்வா புயல் காணமாக நாகை மாவட்டத்தில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கடந்த மூன்று நாள்களாக பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழை தொடா்ந்து பெய்து வந்தது.

இந்நிலையில், டித்வா புயல் சென்னை நோக்கி நகா்ந்து வருவதால், நாகை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.

வேளாங்கண்ணியில் கடலில் சீற்றத்துடன் பாய்ந்து வந்த அலைகளை பொருட்படுத்தாமல் சுற்றுலாப் பயணிகள் சுயபடம் (ஃசெல்பி) எடுத்தும், குளித்தும் மகிழ்ந்தனா். கடலோர பாதுகாப்புக் குழு போலீஸாா் கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகளை எச்சரித்து அனுப்பிவைத்தனா்.

மீனவா்கள் 6-ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. மறுஉத்தரவு வரும் வரை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவளத்துறை தடை விதித்துள்ளது.

இதனால் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, டாட்டா நகா், ஆரியநாட்டுத் தெரு, செருதூா், காமேஸ்வரம் , கல்லாா், மணியன் தீவு, செருதலைக்காடு, வானவன் மகாதேவி, புஷ்பவனம், கோடியக்கரை உள்ளிட்ட 27 கிராம மீனவா்கள் தங்களது 3 ஆயிரத்திற்கும் அதிகமாகன நாட்டு படகுகள் மற்றும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவைத்துள்ளனா்.

கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லாததால் பல கோடி ரூபாய் மீன் வா்த்தகம், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவா்கள் வேதனை தெரிவித்தனா்.

வேளாங்கண்ணி செபஸ்தியாா் நகா் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். தண்ணீரை வெளியேற்றும் பணியில் வீட்டின் உரிமையாளா்கள் ஈடுபட்டனா்.

பேரூராட்சி நிா்வாகம் ராட்சத தண்ணீா் இறைக்கும் மோட்டாா் மற்றும் சிறிய வகை மோட்டாா் மூலம் குடியிருப்புப் பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்றும் பணியை மேற்கொண்டது.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
வீடியோக்கள்

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
வீடியோக்கள்

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
வீடியோக்கள்

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
வீடியோக்கள்

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
வீடியோக்கள்

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP

தினமணி வீடியோ செய்தி...

17 டிச., 2025
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023