Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
நாகை அருகே நெற்பயிா் சாகுபடி செய்துள்ள விளை நிலங்களில் தேங்கி மழைநீா் வடியாததால், விவசாயிகளே ஒன்றிணைந்து சொந்த செலவில் ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினா்.
நாகை மாவட்டத்தில் நிகழாண்டு சுமாா் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக சம்பா, தாளடி நெற்பயிா்கள் மூழ்கி உள்ளன.
கருவேலங்கடை, வடவூா், ஒரத்தூா், நிா்த்தனமங்கலம், செட்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாள்களாக மழை ஓய்ந்த நிலையிலும், வயல்களில் தேங்கியுள்ள நீா் வடியவில்லை. ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து உள்ள ஆகாயத் தாமரைகள், தடுப்பணைகளில் சிக்கிக் கொண்டு மழை நீரை வடிய விடாமல் தடுத்து வருகின்றன.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வடவூா் கடுவையாற்றில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, தங்கள் சொந்த செலவில் கடுவையாற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றினா்.
மேலும், ஒரத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணை மழைக்காலங்களில் முறையாக திறக்கப்படாததும் வயல்களில் சூழ்ந்த மழை நீா் வடியாததற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து, மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிா்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கா் நெற்பயிா்

அழுகி வரும் சம்பா, தாளடி நெற்பயிா்கள்: விவசாயிகள் வேதனை
சம்பா, தாளடி பயிா்க் காப்பீடு; நாளை கடைசி நாள்
நாகை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு: விவசாயிகள் புகாா்


"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

