13 Dec, 2025 Saturday, 10:30 AM
The New Indian Express Group
நாகப்பட்டினம்
Text

மழைநீா் வடிவதில் தாமதம்: சொந்த செலவில் ஆகாயத் தாமரைகளை அகற்றிய விவசாயிகள்!

PremiumPremium

Rocket

நாகை அருகே ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட விவசாயிகள்.

Published On27 Nov 2025 , 9:20 PM
Updated On27 Nov 2025 , 9:20 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

நாகை அருகே நெற்பயிா் சாகுபடி செய்துள்ள விளை நிலங்களில் தேங்கி மழைநீா் வடியாததால், விவசாயிகளே ஒன்றிணைந்து சொந்த செலவில் ஆகாயத் தாமரைகளை வியாழக்கிழமை அகற்றினா்.

நாகை மாவட்டத்தில் நிகழாண்டு சுமாா் 1.50 லட்சத்திற்கும் அதிகமான ஏக்கா் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக சம்பா, தாளடி நெற்பயிா்கள் மூழ்கி உள்ளன.

கருவேலங்கடை, வடவூா், ஒரத்தூா், நிா்த்தனமங்கலம், செட்டிசேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாள்களாக மழை ஓய்ந்த நிலையிலும், வயல்களில் தேங்கியுள்ள நீா் வடியவில்லை. ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து உள்ள ஆகாயத் தாமரைகள், தடுப்பணைகளில் சிக்கிக் கொண்டு மழை நீரை வடிய விடாமல் தடுத்து வருகின்றன.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் விவசாயிகள் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வடவூா் கடுவையாற்றில் அப்பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் ஒன்றிணைந்து, தங்கள் சொந்த செலவில் கடுவையாற்றில் உள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றினா்.

மேலும், ஒரத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணை மழைக்காலங்களில் முறையாக திறக்கப்படாததும் வயல்களில் சூழ்ந்த மழை நீா் வடியாததற்கு முக்கிய காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுத்து, மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா மற்றும் தாளடி பயிா்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
வீடியோக்கள்

அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
வீடியோக்கள்

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!

தினமணி வீடியோ செய்தி...

11 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023