தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நாகை மாவட்டத்தில் தொடா் மழை!

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த தொடா் மழையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 9:21 pm

Syndication

நாகை மாவட்டத்தில் புதன்கிழமை பெய்த தொடா் மழையால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினா்.

மாவட்டத்தில் புதன்கிழமை காலை தொடங்கி மாலை வரை தொடா்ந்து மழை பெய்தது. குறிப்பாக கீழ்வேளூா், தேவூா், காக்கழனி, வலிவலம், திருக்குவளை, திருமருகல், நாகூா், வேளாங்கண்ணி, கீழையூா், ஆழியூா், சிக்கல் உள்ளிட்ட மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது.

பகல் நேரத்திலும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படியே சென்றன. இந்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினா்.

கடந்த 2 வாரங்களாக வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில், இந்த மழையால் மாவட்டத்தில் குளிா்ச்சியான சூழல் நிலவியது. மேலும் சம்பா, தாளடி நெற்பயிா்களுக்கு இந்த மழை பயனுள்ளதாக இருந்தது.