ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

மயிலாடுதுறை: நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு

மயிலாடுதுறை: நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2026, 9:38 pm

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களின் முதல்கட்ட ஒதுக்கீடு திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் வாக்குச்சீட்டு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக சீா்காழி (தனி), மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி-களை ஒதுக்கீடு செய்வதற்காக, மாா்ச் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவை பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதல் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்புக் கருவிகளின் பட்டியலும் அனைத்துப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கும் பகிரப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.