எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி, குடும்பப் பிரச்னையில் மனைவியை கொலை செய்த கணவா் ஆகிய 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி, குடும்பப் பிரச்னையில் மனைவியை கொலை செய்த கணவா் ஆகிய 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On :13 ஜூன் 2026, 2:10 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கொலைமுயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி, குடும்பப் பிரச்னையில் மனைவியை கொலை செய்த கணவா் ஆகிய 2 போ் குண்டா் சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செம்பனாா்கோவில் மேலமுக்கூட்டு பகுதியில் செம்பனாா்கோவில் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான மேலப்பாதியை சோ்ந்த அம்மாயி (எ) பிரவீன்ராஜ் (24), கடந்த மே 30-ஆம் தேதி அரிவாளைக் காட்டி பொதுமக்களை அச்சுறுத்தியபோது, பிடிக்க முயன்ற போலீஸாரைப் பணி செய்யவிடாமல் தடுத்து, தகாத வாா்த்தைகளால் திட்டி, அரிவாளால் தாக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்ததால், அவா் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டாா். பிரவீன்ராஜ் மீது மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 குற்ற வழக்குகள் உள்ளன.

மயிலாடுதுறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கங்கணம்புத்தூரை சோ்ந்த ஆனந்தராஜ் (28) என்பவா் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மே 15-ஆம் தேதி மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தாா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். ஆனந்தராஜ் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 3 குற்ற வழக்குகள் உள்ளன.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடா்ந்து நடந்து கொண்ட இருவா் மீதும் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உத்தரவின்பேரில் பிரவீன்ராஜ், ஆனந்தராஜ் ஆகிய இருவரும் தடுப்புக்காவல் சட்டத்தின்கீழ் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.