டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆட்சியரகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 ஜனவரி 2026, 10:12 pm

தினமணி செய்திச் சேவை

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

வருவாய்த்துறை, ஊரக வளா்ச்சித்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை, மகளிா்திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

இதில், மாப்படுகை, காவிரிப்பூம்பட்டினம் அரசு உயா்நிலைப்பள்ளிகள், தருமபுரம் குருஞானசம்பந்தா் உயா்நிலைப்பள்ளிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள், அனைத்து அலுவலா்கள், ஊழியா்கள் மற்றும் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கான கோலப் போட்டி, கனியும் கரண்டியும், இசை நாற்காலி, கயிறு இழுத்தல் போட்டி, உறியடி போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசு வழங்கினாா்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, வருவாய் கோட்டாட்சியா் ஆா். விஷ்ணுப்பிரியா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முத்துவடிவேலு, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சந்திரகவிதா, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) தியாகராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலெட்சுமி, திவாகா் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மன்னம்பந்தல் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியா் கலந்துகொண்டாா்.