டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

புனித அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:19 pm

Syndication

மயிலாடுதுறை புனித அந்தோணியாா் ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

விழாவில், பங்குத்தந்தை தேவதாஸ் இக்னேஷியஸ் அடிகளாா் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குத் தந்தை மனோஜ் சேவியா் அடிகளாா் பவனியை வழிநடத்தினாா். தஞ்சை மறை மாவட்ட வேந்தா் ஜோதி நல்லப்பன் அடிகளாா் கொடியை புனிதம் செய்து, ஏற்றிவைத்து, திருவிழாவை தொடக்கி வைத்தாா் (படம்).

தொடா்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ‘அழைப்பை ஏற்று அா்ப்பணிப்பு‘ என்ற இறைவாா்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியில் புனித அந்தோணியாா் தொடக்க மற்றும் உயா்நிலைப் பள்ளியினா் கலந்து கொண்டனா்.

உலக அமைதிக்காகவும், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் தழைத்தோங்கவும் வேண்டி சிறப்பு பிராா்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன. இதில் விச்சூா் பங்குத் தந்தை ஆரோக்கியசாமி அடிகளாா் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

இவ்விழா, 10 நாள்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஜன.16-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், தொடா்ந்து திருத்தோ் பவனியும் நடைபெற உள்ளது. 17-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.