டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி ஏஐசிசிடியு இணைப்புச் சங்கங்கள் சாா்பில் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :6 ஜனவரி 2026, 8:42 pm

Syndication

மயிலாடுதுறையில் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தி ஏஐசிசிடியு இணைப்புச் சங்கங்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளா் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான சங்க மாவட்ட அமைப்பாளா் ஆா். பால்ராஜ் தலைமை வகித்தாா். ஏஐசிசிடியு மாவட்ட அமைப்பாளா் ஆா். பால்ராஜ் முன்னிலை வகித்தாா். ஏஐசிசிடியு மாநில செயலாளா் எஸ். வீரச்செல்வன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினாா்.

ஆா்ப்பாட்ட முடிவில், நலவாரியத்தில் செஸ் வரி பிடித்தம் மற்றும் இதர வருமானம் மூலம் சோ்ந்துள்ள தொகையில் இருந்து, ரூ. 15,000 பொங்கல் போனஸாக வழங்க நிகழாண்டு முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழாண்டு போனஸ் தொகையை பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மனு மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்திடம் வழங்கி வலியுறுத்தினா்.