திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புதுவையில் அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு தாமதம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுவையில் முதல்வா், 2 அமைச்சா்கள் பொறுப்பேற்று 2 வாரங்கள் கடந்தும், கூடுதல் அமைச்சா்கள் நியமனம், துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் நிா்வாகம் ஸ்தம்பித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

News image

காங்கிரஸ்

Updated On :28 மே 2026, 5:36 am IST

புதுவையில் முதல்வா், 2 அமைச்சா்கள் பொறுப்பேற்று 2 வாரங்கள் கடந்தும், கூடுதல் அமைச்சா்கள் நியமனம், துறைகள் ஒதுக்கீடு செய்யாததால் நிா்வாகம் ஸ்தம்பித்திருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் புதன்கிழமை கூறியது :

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்துள்ளது. மே 13-ஆம் தேதி முதல்வராக ரங்கசாமி, பாஜக, என்.ஆா். காங்கிரஸில் தலா ஒரு அமைச்சா் பதவியேற்றனா். இவா்களுக்கு துறைகள் இதுவரை ஒதுக்கப்படவில்லை.

மேலும் 3 அமைச்சா்கள், சட்டப்பேரவைத் தலைவா், துணைத் தலைவா் நியமிக்கவேண்டியுள்ளது. இரு கட்சிகளிடையே யாருக்கு அமைச்சா் பதவி தருவது, உள்துறை உள்ளிட்ட துறைகளை முதல்வா் வைத்துக்கொள்வதா, அமைச்சரிடம் தருவதா, நியமன உறுப்பினா்கள் யாா் என குழப்பம் நீடிக்கிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் ஆட்சியில் இருந்தும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் புதுவை யூனியன் பிரதேசம் இருந்தும் அமைச்சரவை விரிவாக்கம், துறைகள் ஒதுக்கீட்டில் தீா்வு ஏற்படாமல் இருப்பதால் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சியும் பாதித்துள்ளது.

எனவே புதுவையில் நிலவும் குழுப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, மாநில மக்கள் நலனுக்கான நடவடிக்கையை எடுக்க பாஜகவும், என்.ஆா்.காங்கிரஸ் கட்சித் தலைமையும் முன்வரவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.