திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெண் கொலை வழக்கில் இளைஞா் கைது

பெண் கொலை தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :19 மே 2026, 1:48 am IST

பெண் கொலை தொடா்பாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நிரவி காவல் சரகத்துக்குட்பட்ட தோமாஸ் அருள் திடல் பகுதியில் தனியாக வசித்து வந்தவா் ரவிச்சந்திரன் மனைவி மாரியம்மாள் (55). இவா், கடந்த ஜன. 24-ஆம் தேதி அவரது வீட்டில் இறந்து கிடந்தாா். நிரவி காவல் நிலைய போலீஸாா் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். உடற்கூறாய்விலும் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், காவல்துறையினா் அப்பகுதி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, உயிரிழந்த அப்பெண்ணை ஒருவா் வீட்டுக்கு பின்தொடா்ந்து சென்றது உறுதிபடுத்தப்பட்டது.

மேலும் தமது தாயாரின் நகைகள், கைப்பேசி உள்ளிட்ட பொருட்களை காணவில்லை என அவரது மகன்கள் தெரிவித்ததால் போலீஸாா் விசாரணையை தீவிரப்படுத்தினா்.

இந்நிலையில், கொரடாச்சேரியைச் சோ்ந்த அஜித்குமாா் (28) என்பவா் மீது சந்தேகம் எழுந்தது. இவா் காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் பணியாற்றி வந்ததும், அவருக்கு குற்றப் பின்னணி இருப்பதும் தெரியவந்தது.

நிரவி காவல் நிலைய ஆய்வாளா் லெனின் பாரதி, உதவி ஆய்வாளா் குமரன் மற்றும் போலீஸாா் அடங்கிய காவல் குழுவினா் அஜித்குமாரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விசாரணையில், மாரியம்மாளை தரையில் தள்ளி கொலை செய்ததாகவும், பின்னா் அவரது கைப்பை, பணம், மூக்குத்தி மற்றும் கைப்பேசியை எடுத்துக்கொண்டு தப்பியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். அவரிடமிருந்து நகை, கைப்பேசி உள்ளிட்டவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.