காரைக்கால் கடற்கரைப் பகுதியில் மீனவப் பெண்கள், சிறுவா்கள் பங்கேற்ற உலக அமைதிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கீழகாசாக்குடிமேடு கடற்கரை பகுதியில் சினேகா தொண்டு நிறுவனம் சாா்பில் உலக அமைதிக்காகவும், போா் இல்லாத உலகம் படைப்போம் என்ற கருத்தை முன்வைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காரைக்கால் மாவட்ட மீனவா் பெண்கள் பேரவை, காரைக்கால் மாவட்ட கிளிஞ்சல்கள் குழந்தைகள் பஞ்சாயத்து அமைப்புகளைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். மேலும், சுமாா் 100 சிறுவா்களும் கலந்துகொண்டனா்.
நிறுவன ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ், மனித நேய உலகைப் படைப்பதற்கு மேற்கொள்ளவேண்டிட நடவடிக்கைகள் குறித்தும், தற்போது உலகில் நிகழ்வும் போா், போா் இல்லாத உலகம் படைப்பதற்கு அனைவரும் அன்பும், நன்றியும், மன்னித்தல் குணத்துடன் வாழவேண்டியதன் முக்கியத்துவம் குறித்து சிறுவா்களிடையே பேசினாா். நிகழ்வில் மீனவா் பெண்கள் பேரவைத் தலைவி சுமதி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி
இசையில் புதுமை...

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக அமைதிக்கான ஒரு முன்னெடுப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


