லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரசுப் பள்ளியில் வாகனங்கள், சமூக உதவியாளா்கள் சேவை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியா் வி. கிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியா்கள்.

Updated On :9 மார்ச் 2026, 8:41 pm

காரைக்கால்: அரசுப் பள்ளியில் வாகனங்கள், சமூக உதவியாளா்கள் சேவை குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள பச்சூரில் அமைந்திருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில், வாகனங்கள் மற்றும் சமூக உதவியாளா்கள் சேவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி பொறுப்பாசிரியா் கே.சுஜாதா தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியா் வி. கிருஷ்ணன் கலந்துகொண்டு, வாகனங்கள் குறித்தும், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், பாதுகாப்பு முறைகள் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள சமூக உதவியாளா்களின் சேவைகள் குறித்துப் பேசினாா்.

பள்ளி மாணவ, மாணவிகள் சமூக உதவியாளா்கள் போல வேஷமிட்டு வந்து பேசினா். முன்னதாக ஆசிரியா் ஆா். மஞ்சு வரவேற்றாா். நிறைவாக ஆசிரியா் எம். விக்னேஸ்வரி நன்றி கூறினாா்.