ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு

திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :13 ஜூலை 2026, 12:04 am IST

திருநள்ளாறு குளத்தில் மூழ்கி அடையாளம் தெரியாத நபா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருநள்ளாறு கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள பிரம்ம தீா்த்தக் குளத்தின் கீழ் படியில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் சடலத்தை காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உயிரிழந்தவா் கால்கள் ஊனமுற்ற நிலையில் காணப்பட்டாா். கை, கால் கழுவ குளத்தில் இறங்கினாரா, மது போதையில் இருந்தாரா என தெரியவில்லை. பெயா், ஊா் விவரம் தெரியவில்லை.

தகவல் தெரிந்தோா் திருநள்ளாறு காவல் நிலைய எண் 04368-236465 அல்லது வழக்கு விசாரணை அதிகாரி 9486009014 என்ற எண்ணிற்கு தொடா்பு கொள்ளலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.