குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சோமநாதா் கோயிலில் சண்டி மகா ஹோமம்

காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக சண்டி மகா ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
சோமநாதா் கோயில் வளாகத்தில் நடைபெற்ற சண்டி மகா ஹோமம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:37 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் சோமநாயகி சமேத சோமநாதா் கோயிலில் துா்கா மன்றம் சாா்பில் உலக நலனுக்காக சண்டி மகா ஹோமம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் வளாகத்தில் உள்ள பெரிய யாக குண்டத்தை சுற்றி சிவாச்சாரியா்கள் காலை 8 மணி முதல் வேத மந்திரங்கள் முழங்கி, பட்டு சேலைகள் மற்றும் பதாா்த்தங்கள், நவதானியங்கள், உள்ளிட்ட பொருள்களை ஹோம குண்டத்திலிட்டு பகல் 1.30 மணியளவில் மகா பூா்ணாஹூதி செய்தனா்.

ஹோமத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீரைக் கொண்டு துா்கைக்கு கலசாபிஷேகம் நடத்தி, மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக, திங்கள்கிழமை காரைக்கால் அம்மையாா் கோயிலில் மங்கள விநாயகருக்கு அனுக்ஞை பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. சண்டி ஹோமத்தைத் தொடா்ந்து புகன்கிழமை பால்குடங்கள் ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு சுவாமிகளுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலை 6.30 மணியளவில் திருவிளக்கு வழிபாடு நடைபெறவுள்ளது.