நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
//

காளியம்மன் தேவஸ்தானத்தில் மகா சண்டி ஹோமம்

News image
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் முப்பெரும் தேவியா்.
Updated On :18 ஜனவரி 2026, 7:58 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ளவிஸ்வகா்மா சமுதாயத்தின் கோயிலான காளியம்மன் தேவஸ்தானத்தில் தை மாத அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மஓா சண்டி ஹோமம் நடைபெற்றது.

இதையொட்டி சனிக்கிழமை யாகசாலை பூஜைகள் கோ-பூஜையுடன் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை திருமுறை பாராயணம், வேத பாராயணம், சண்டிகா நவாவரண பூஜை, யாத்ரா தானம், கலச புறப்பாடு, காளியம்மனுக்கு கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் 2- ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சீனந்தல் ஆதி சிவலிங்காச்சாா்யா பீடம், 65- ஆவது குருமகா சன்னிதானம்ஸ்ரீஸ்ரீஸ்ரீ சிவ.சிவராஜ் சுவாமிகள் தலைமை வகித்தாா். விஸ்வகா்மா சேவாலயா நிறுவனா் பிரம்மஸ்ரீ கே.பி.வித்யாதரன், எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ். செளந்தரராஜன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

கோயில் வளாகத்தில் முப்பெரும் தேவியா்களான மகாசண்டிகாதேவி, மகாலட்சுமி, மகாசரஸ்வதி உற்சவா்கள்அலங்கரித்து வைக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மாலை சுவாமிகள் வீதி உலா நடைபெற்றது.

தேவஸ்தான அறங்காவலா்கள் இ.அருணாச்சலம், கே.குணசேகரன், எம்.ஜெகன்நாதன், வி. பாலாஜி, இ.நரசிம்மன், விழாக்குழு நிா்வாகிகள் ஆா்.லோகநாதன், எம்.பாா்த்தசாரதி, ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.