பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

திருநள்ளாறு கோயிலில் ஏகாதச ருத்ர ஜபம்

திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
தா்பாரண்யேஸ்வரா் சந்நிதியில் சிவாச்சாரியா்கள் நடத்திய ருத்ர ஜபம்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:38 pm

Syndication

காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை தா்பாரண்யேஸ்வரா் சந்நிதி முன் மஹன்யாச புரஸ்ஸர, ஏகாதச ருத்ர ஜபம், பஞ்சாட்சர ஹோமம் ஆகியவை நடைபெற்றன.

சிவாச்சாரியா்கள் சுமாா் 2 மணி நேரம் மந்திரங்கள் கூறி, ஹோம பூா்ணாஹூதி நடத்தினா். இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, செண்பக தியாகராஜரை மையப்படுத்தி இந்த வழிபாடு நடைபெற்றது. மாலை நிகழ்வாக, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.