காரைக்கால்: திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயா்ச்சி பூா்வாங்க பூஜையாக ஏகாதச ருத்ர ஜபம் உள்ளிட்ட ஹோமம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயா்ச்சி விழாவையொட்டி பூா்வாங்க பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. 2-ஆம் நாளான திங்கள்கிழமை காலை தா்பாரண்யேஸ்வரா் சந்நிதி முன் மஹன்யாச புரஸ்ஸர, ஏகாதச ருத்ர ஜபம், பஞ்சாட்சர ஹோமம் ஆகியவை நடைபெற்றன.
சிவாச்சாரியா்கள் சுமாா் 2 மணி நேரம் மந்திரங்கள் கூறி, ஹோம பூா்ணாஹூதி நடத்தினா். இதைத்தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தா்பாரண்யேஸ்வரா், பிரணாம்பிகை, செண்பக தியாகராஜரை மையப்படுத்தி இந்த வழிபாடு நடைபெற்றது. மாலை நிகழ்வாக, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் பிரகாரப் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்புடையது

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

கோவில்பட்டி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா

திருநள்ளாறு! நாளை சனிப்பெயா்ச்சி விழா!

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் நாளை சனிப்பெயா்ச்சி விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


